- புதுக்கோட்டை
- அன்னை சத்ய அம்மையார்
- நினைவு அரசு சிறுவர் வீட்டுக் கலெக்டர்
- கலெக்டர்
- மெர்சி ரம்யா
- புதுக்கோட்டை அன்னை சத்ய அம்மையார் நினைவு அரசு சிறுவர் இல்லம்
- சத்திய அம்மையார் நினைவு அரசு சிறுவர் வீட்டுக் கலெக்டர்
புதுக்கோட்டை, ஜூன் 14: புதுக்கோட்டை அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நரிமேடு பகுதியில், சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு செய்த கலெக்டர், மாணவிகளுக்கு கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, மாணவிகள் தங்கும் இடம் வசதி குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவியர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும் இந்த இல்லத்தில் உள்ள சமையலறை, நூலகம் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து விளையாட்டுத் திடலினை பார்வையிட்டு ஆய்வு செய்து, மேலும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .வசந்தகுமார், வட்டாட்சியர் .விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post புதுக்கோட்டை அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.