×

தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தரை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழக கவர்னரின் உத்தரவின் பேரில், தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தகவல் ஆணையர்களாக முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன், வக்கீல் பிரியகுமார், ஐசிஎல்எஸ் முன்னாள் அதிகாரி திருமலைமுத்து, டாக்டர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பதவிகள் அனைத்தும் காலியாக இருந்ததால், தற்போது நிரப்பப்பட்டுள்ளன. இந்த பதவிகளில் நியமிக்கப்படுகிறவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை பதவியில் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Shakeel Akhtar ,Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,Chief Information Commissioner ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...