×

மனித உரிமையை மீறும் வகையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: மனித உரிமையை மீறும் வகையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, அரசு போக்குவரத்துக்கழக பணி நியமன முறைகேடு புகாரில் காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணாமலை பேச்சால் சர்ச்சை ஏற்பட்டு அதிமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை அதிமுக ஆட்சி தொடர்பானது. செந்தில் பாலாஜியை நிலை குறித்து அறிய விரும்பினோம்; அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது என்று கூறினார்.

The post மனித உரிமையை மீறும் வகையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Senthil ,Balaji ,R.R. S. Bharati ,Chennai ,enforcement ,Djagar ,Senthil Balaji ,R. S. Bharati ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...