×

ஆலடிப்பட்டியில் குவாரி அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு

 

திருச்சுழி, ஜூன் 13: திருச்சுழி அருகே ஆலடிபட்டி பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இக்குவாரிகளால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஆலடிபட்டி பகுதியில் உள்ள கண்மாயிக்கு வருகின்ற வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து ரத்தாகி உள்ளது. மேலும் குவாரிகளில் வெடிவெடிப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பலமுறை அதிமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.

குவாரிகளில் வருகின்ற தூசியால் மக்கள் தினம், தினம் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் ஆலடிபட்டி அருகே புதியதாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிரசர் குவாரி திறக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கிராமமக்கள் திரண்டு குவாரி திறக்க கூடாதென எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பணிகளை தற்காலிகமாக நிறுத்தினர். மீண்டும் குவாரி அமைக்க முயன்றால் நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக கிராமமக்கள் கூறினர்.

The post ஆலடிப்பட்டியில் குவாரி அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Aladipatti ,Thiruchuzhi ,
× RELATED திருச்சுழி-உடையானம்பட்டி இடையே...