×

நிழற்குடை அமைக்க கோரிக்கை

 

வருசநாடு, ஜூன் 13: கடமலைக்குண்டு அருகே பாலூத்து மற்றும் தேவராஜ்நகர் மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இதனால் தேனி வருசநாடு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இங்கு நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Kadamalaikundu ,Baluthu ,Devarajnagar ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில்...