×

காரத்தொழுவில் திமுக சார்பில் அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு

 

உடுமலை, ஜூன் 13: மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாளான 3-ம் தேதி திமுக கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நேற்று காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நாதஸ்வர இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 850 மாணவ- மாணவிகளுக்கு பேனா, இனிப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் குலாம் தஸ்தகீர் வரவேற்றார். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை காரத்தொழுவு திமுக சார்பில் மாவட்ட திமுக பொருளாளர் முபாரக்அலி தலைமையில் நிர்வாகிகள் இளங்கோவன், ஜான்சி அரி, கிருஷ்ணசாமி, பரமேஸ்வரன், காளிமுத்து, சொக்கலிங்கம், அழகிரிசாமி, பாண்டியன், பழனிசாமி, ராசு, பாரூக், ஜோதி, திருஞானம், வளர்மதி, நந்தினி, நித்யா, ராதா, காளீஸ்வரி, ஓம்பிரகாஷ், முருகன், மணி, சுந்தர்ராஜ், ரங்கதுரை, அழகு சுப்பிரமணி, மணிகண்டபிரபு மறும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

The post காரத்தொழுவில் திமுக சார்பில் அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Karatozhulu ,Udumalai ,Karunanidhi ,Madathikulam East Union Karatoshuvu ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு