×

சோளிங்கர் அருகே மொரம்பு மண் கடத்திய ஜேசிபி, லாரி பறிமுதல்

சோளிங்கர், ஜூன் 12: சோளிங்கர் அருகே மொரம்பு மண் கடத்திய ஜேசிபி, லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். சோளிங்கர் அடுத்த கேசவனாங்குப்பம் ஏரியிலிருந்து ஜேசிபி மற்றும் லாரி மூலம் மொரம்பு மண் கடத்தப்படுவதாக சோளிங்கர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் கடத்தல்காரர்கள் ஜேசிபி மற்றும் லாரியை மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றனர். இருப்பினும், சினிமா பாணியில் போலீசார் சிறிது தூரம் பைக்கில் துரத்தி சென்று லாரி மற்றும் ஜேசிபியை மடக்கி பிடித்து நிறுத்தினர். அப்போது, லாரி மற்றும் ஜேசிபியை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து, லாரி மற்றும் ஜேசிபியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான டிரைவர்களை தேடி வருகின்றனர்.

The post சோளிங்கர் அருகே மொரம்பு மண் கடத்திய ஜேசிபி, லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : JCP ,morambu ,Solingar ,JCB ,Solinger ,Lorry ,Dinakaran ,
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...