×

காற்றுக்காக கதவை திறந்ததால் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ‘அபேஸ்’

 

தேனி, ஜூன் 12: தேனி அருகே பழனிசெட்டிபட்டி குருசாமி தெருவில் குடியிருப்பவர் காமாட்சி மகன் ஆண்டவர்(55). இவர் கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிக வெப்பம் காரணமாக வீட்டுக் கதவை திறந்து வைத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் படுக்கை அறையில் சத்தம் வருவதை பார்த்து சென்று பார்த்தபோது, அங்கிருந்து மர்ம நபர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தப்பிச் சென்றதை பார்த்தனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த ரூ.50ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் ஒன்றை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டவர் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காற்றுக்காக கதவை திறந்ததால் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ‘அபேஸ்’ appeared first on Dinakaran.

Tags : Abes ,Theni ,Kamachi ,Andavar ,Palanisettipatti Kurusamy Street ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்