×

ராணுவ வீரரின் மனைவியை தாக்கிய 2 பேர் கைது

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(41). இவர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடத்தி வந்த கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, படவேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் மனைவி கீர்த்தி (28) என்பவருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த கடையை காலி செய்வது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ராணுவ வீரர் மனைவி கீர்த்திக்கு ஆதரவாக அவரது அண்ணன்கள் உதயா, ஜீவா ஆகியோர் ராமுவை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல், ராமுக்கு ஆதரவாக அரிகரன், செல்வராஜ், ஜெயகோபி, மது ஆகியோர் கீர்த்தியை தாக்கி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பு அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ் (56) அரிகரன்(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கீர்த்திக்கும், படவேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post ராணுவ வீரரின் மனைவியை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Ramu ,Kunnathur ,Arani ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர்,...