×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்ைக அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 74,502 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38,052 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ3.73 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : thirupati elemalayan ,Tirumalai ,Tirupati Edemalayan Temple ,Tirupati Etemalayan Temple ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...