×

ஓடிசா ரயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் மெளன அஞ்சலி

 

மஞ்சூர், ஜூன்.6: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 288 பேர் பலியான நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பலியான மக்களுக்கு பல்வேறு தரப்பிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாருக், சுரேஷ்குமார், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரவி, திலிப்குமார், செந்தில் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆரி, ரகுநாதன், அலியார் பல்வேறு சங்கங்கள், பொதுநல அமைப்பினர், வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பலியானோர் உருவ படங்களுக்கு மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

The post ஓடிசா ரயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் மெளன அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Manjur ,Odisha train ,Manjoor ,All Shopkeepers Association of Manjoor ,Odisha train accident ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை