×

லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பலி

தூத்துக்குடி,ஜூன்10: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளை கூத்தடிதெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி ராமலட்சுமி (75). இவர் நேற்று முன் தினம் மாலை தனது மகளை பார்ப்பதற்காக தூத்துக்குடி கோரம்பள்ளம் வந்துள்ளார். அப்போது பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பாக சாலையை கடந்து செல்லும் போது அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த ராமலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Arunachalam ,Ramalakshmi ,Sivakal Koothaditheru ,Eral, Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...