×

கோயம்பேட்டில் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை உயர்வு: 1 கிலோ கனகாம்பரம் ரூ.600, மல்லி ரூ.400

சென்னை: வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஓசூர், சேலம், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து தினமும் கனகாம்பரம், மல்லி, ரோஸ் உள்பட பலவகையான பூக்கள் அதிகளவில் வருகிறது. இந்நிலையில், ஓசூரில் மழையால் வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லி ரூ.400க்கும், ஐஸ் மல்லி ரூ.300க்கும், ஜாதிமல்லி, முல்லை ரூ.250க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், சாமந்தி ரூ.160க்கும், சம்பங்கி ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், பன்னீர்ரோஸ் ரூ.70க்கும், அரளி பூ ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஓசூரில் மழை பெய்துவருவதால் அனைத்து பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

The post கோயம்பேட்டில் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை உயர்வு: 1 கிலோ கனகாம்பரம் ரூ.600, மல்லி ரூ.400 appeared first on Dinakaran.

Tags : Coimbet ,Chennai ,Coimbed ,Didikukal ,Coimbade Market ,Malli ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது