மதுரை, ஜூன் 6: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில், சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மதுரையை சேர்ந்த வீரர் விகாஸ் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் 23.10 வினாடிகள் நீந்தி புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு சென்னையை சேர்ந்த பவன்குப்தா 24.16 வினாடிகளில் இந்த தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்து வந்தது.
மற்றொரு நீச்சல் வீராங்கனை ரோஷினி 200 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் ஜூலை 2ம் தேதி தொடங்கும், தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வு பெற்றனர். வெற்றி பெற்றவர்களை மதுரையில் நடந்த விழாவில் தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர், துணைத்தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ், துணைச்செயலாளர் திருமாறன், மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் அரவிந்த் ஆகியோர் பாராட்டினர்.
The post சாதனை நீச்சல் வீரருக்கு பாராட்டு appeared first on Dinakaran.