×

தேசிய பஞ்சாலை முன்பு ஆர்ப்பாட்டம்

 

காளையார்கோவில், ஜூன் 2: காளையார்கோவிலில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனமான தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு உள்பட்ட காளீஸ்வரர் மில்ஸ் பி யூனிட் ஆலை, கடந்த 2020 மார்ச் முதல் இயங்கவில்லை. இதனால் இங்கு பணிபுரிந்த சுமார் 700 தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் ஆலை நிறுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கவில்லை. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, கடந்த ஒன்றரை வருடங்களாக வழங்கப்படவில்லை.

கடந்த எட்டு மாதங்களாக தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அத்தியாவசியப் பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து, சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து, நேற்று பஞ்சாலை முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் நலன் கருதி, இந்த பஞ்சாலையை திறக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

The post தேசிய பஞ்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : National Panchal ,Kalaiyarkoil ,Kaliswarar Mills ,National Panchal Corporation ,Government Institution ,National Panchala ,Dinakaran ,
× RELATED தபால் ஓட்டுபோட்டு வீடியோ வெளியீடு...