×

திருவேற்காட்டில் ரூ.2.91 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி: ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சி பகுதியில் ரூ.2.91 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருவேற்காடு நகராட்சி பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோலடி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடம், மாதிரா வேடு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், மாநில பேரிடர் மேலாண்மை திட்ட நிதியில் இருந்து ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பில் பாலகிருஷ்ணா நகர், செல்லியம்மன் நகர், சக்கரேஸ்வரர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் மேல்மூடி அமைத்தல் ஆகிய பணிகள் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா திருவேற்காடு நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

நகர் மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா, பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில திமுக இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பவுல், நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கர், நகர் மன்ற உறுப்பினர்கள் உமாபதி, பிரதானம், சுதாகர், சாந்தி ராஜா, காஞ்சனா இளையராஜா, திருவேற்காடு நகர திமுக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காட்டில் ரூ.2.91 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruveludad ,Awadi S.A. ,b.k. Nassar ,MLA ,Poonthamalli ,Awadi ,Thiruvetadam Municipal Area ,Awadi Assembly Constituency ,Thiruveludad ,Awadi S.A. b.k. ,Nassar ,
× RELATED திருவேற்காட்டில் பள்ளி மாணவர்களுக்கு...