×

சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள மொட்டைமாடியில் திடீர் தீ விபத்து..!!

சென்னை: சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள மொட்டைமாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் நான்கு மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வந்தது. அப்போது அலுவக கட்டிடத்தில் மாடியில் தீயானது பற்றி எரிந்தது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக வெளியேறினர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

அதற்குள் கட்டிடத்தில் இருந்த காவல்துறையினர் அலுவலக மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மொட்டை மாடியில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்துல் எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லையென முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இது குறித்து எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தீ அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் அங்கு இருந்த மின்சாதன பொருட்களை அகற்றி முழுமையாக தீயை அணைத்தனர்.

The post சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள மொட்டைமாடியில் திடீர் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : CPCIT ,Chennai Chennai ,Chennai ,Chennai Elumpur ,Dinakaran ,
× RELATED சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும்...