×

தச்சநல்லூரில் இளம்பெண் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த தொழிலாளி

நெல்லை, மே 30: தச்சநல்லூரில் இளம்பெண் தவறவிட்ட 2.5 பவுன் தங்க நகையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளியை கமிஷனர் பாராட்டினார். நெல்லை தச்சநல்லூர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தி (26). இவர் கடந்த 27ம் தேதி தாராபுரத்தில் நடந்துசென்றபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க நகையை தவறவிட்டார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மறுநாள் (28ம் தேதி) தாராம்புரத்தில நடந்துசென்றபோது இந்நகையை கண்டெடுத்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை (55) என்ற தொழிலாளி, உடனடியாக நேர்மையுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தியை வரவழைத்த போலீசார், அவரிடம் மீட்கப்பட்ட நகையை வழங்கினர். இந்நிலையில் இதுகுறித்து தெரியவந்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தொழிலாளியான சின்னத்துரையை நேரில் வரவழைத்து அவரது நேர்மையைப் பாராட்டி வெகுமதி அளித்தார். நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post தச்சநல்லூரில் இளம்பெண் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Thachanallur ,Nellai ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...