மதுரை: கரூர் கே.ஆர்.நகரில் குடியிருப்பு திறந்தவெளி பூங்கா பகுதியில் வேறு பணிகள் செய்யக்கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பூங்கா பகுதியில் குப்பை கழிவுகளை கொட்ட தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்சி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். குழந்தைகள் விளையாடும் திறந்த வெளிப் பூங்காவில் குப்பை கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, பல நோய்களுக்கு மக்கள், குழந்தைகள் ஆளாகும் நிலை உள்ளது என மனுவில் குறிப்ப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆஷா அமர்வு, அரசு தரப்பில் வழக்கு குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டது.
The post கே.ஆர்.நகரில் குடியிருப்பு திறந்தவெளி பூங்கா பகுதியில் வேறு பணிகள் செய்யக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை appeared first on Dinakaran.