×

விஷவண்டு கடித்து பெண் விஏஓ பலி

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் முல்லை நகர் பகுதியில் வசித்தவர் இந்திரா காந்தி (50). இவர் அருகிலுள்ள மல்லி பகுதியில் விஏஓவாக பணிபுரிந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த போது இந்திராகாந்தியை விஷ வண்டு கடித்துள்ளது. மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இந்திராகாந்தி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post விஷவண்டு கடித்து பெண் விஏஓ பலி appeared first on Dinakaran.

Tags : Indira Gandhi ,Thiruvilliputtur Mullah Nagar District, ,Thiruvillyputtur ,Malli ,
× RELATED இந்திரா காந்தியின் சொத்துக்களை...