×

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது! 

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நடப்பாண்டில் இதுவரை 192 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் கடத்துபவர்கள் பொருட்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த (01.01.2023) முதல் (26.05.2023) வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 124 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 40 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 15 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 6 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, பாலியல் தொழில் நடத்திய 5 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 192 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கடந்த 20.05.2023 முதல் 26.05.2023 வரையிலான ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 1.யேசுதாஸ் (எ) சதிஷ், வ/26, த/பெ.அம்புரோஸ், ஓடை தெரு, கடலாடிதாங்கல், வேலந்தாங்கல், விழுப்புரம் மாவட்டம் என்பவர் பெண்களை வைத்து பாலியல் நடத்தியது தொடர்பாக, விபச்சார தடுப்புப்பிரிவில் (ITPU) வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 2.மணிகண்டன், வ/21, த/பெ.ராமு, வி.என்.தாஸ் ரோடு, பார்டர் தோட்டம், அண்ணாசாலை என்பவர் குற்றச் செயலில் ஈடுபட்டதால், D-2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 3.இம்ரான் (எ) அரவிந்த், வ/27, த/பெ.ஆனந்தராஜ், லாசர் சர்ச் தெரு, சிந்தாதிரிப்பேட்டை என்பவர் கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதால், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளது. 4.சூர்யா (எ) சூர்யபிரகாஷ், வ/23, த/பெ.சதாசிவம், அன்னை சத்யா நகர் 3வது தெரு, ஆர்.ஏ.புரம், சென்னை என்பவர் மீது E-4 அபிராமபுரம் காவல் நிலையத்திலும், 5.பாபு, வ/34, த/பெ.செல்லப்பன், உசிலம்பட்டி தாலுக்கா, மதுரை மாவட்டம் என்பவர் 6.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக G-1 வேப்பேரி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 6.மணிகண்டன் (எ) மணி, வ/27, த/பெ.ஜெகநாதன், ஶ்ரீதேவி நகர் 9வது தெரு, ஆலப்பாக்கம், சென்னை என்பவர் மீது T-4 மதுரவாயல் காவல் நிலையத்திலும், 7.பாபு (எ) ராஜ்குமார், வ/22, த/பெ.மதிசேகர், பி.கே.காலனி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, புளியந்தோப்பு, சென்னை என்பவர் மீது K-10 கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவிலும், 8.ஆனந்த் (எ) பாக்சர் ஆனந்த், வ/28, த/பெ.நாகப்பன், கே.எம்.கார்டன் 6வது தெரு, புளியந்தோப்பு என்பவர் மீது P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது 2 கொலை முயற்சி, 4 கஞ்சா வழக்குகள் உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளது. 9.அரவிந்த், வ/28, த/பெ.குசேலன், எண்.237, செட்டி தோட்டம், ராயபுரம், சென்னை என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டதற்காக N-1 இராயபுரம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். N-1 இராயபுரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார் இவர் மீது 10 குற்ற வழக்குகள் உள்ளது. 10.முனுசாமி, வ/30, த/பெ.கர்ணன், எண்.128, திருவொற்றியூர், சென்னை என்பவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ள நிலையில், கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 11.சந்தோஷ், வ/25, த/பெ.சண்முகம், கணேசபுரம், பாலகிருஷ்ணா சாலை, மயிலாப்பூர், என்பவர் குற்றச் செயலில் ஈடுபட்டதால், E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி குற்றவாளிகள் யேசுதாஸ் (எ) சதிஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரை 22.05.2023 அன்றும், இம்ரான் (எ) அரவிந்த், சூர்யா (எ) சூர்யபிரகாஷ், பாபு, மணிகண்டன் (எ) மணி, பாபு (எ) ராஜ்குமார், மற்றும் ஆனந்த் (எ) பாக்சர் ஆனந்த் ஆகியோரை 23.05.2023 அன்றும், அரவிந்த்,  முனுசாமி ஆகியோரை 24.05.2023 அன்றும், சந்தோஷ் என்பவரை 26.05.2023 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 11 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

The post சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது!  appeared first on Dinakaran.

Tags : chennai borough ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…