×

பெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் ரூபி மனோகரன் எம்எல்ஏ மரியாதை

நெல்லை மே 22: மறைந்த பாரத பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை தாம்பரத்தில், சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தியின் படத்துக்கு தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நரேந்திரமோடி தலைமையிலான பாஜ அரசு, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியாவை கட்டமைத்ததே காங்கிரஸ் பேரியக்கம் தான். அப்படி இருக்கும்போது, பாஜ அரசுக்கு அப்படியொரு நினைப்பு எப்படி வரலாம்? இந்த நாட்டுக்காகவே தங்களை அர்ப்பணித்தது நேரு குடும்பம். அவரது தந்தை மோதிலால் நேரு, அந்தக்காலத்திலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்.

பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில், அவர்களுக்கு பணப்பற்றாக்குறை என்றால், மோதிலால் நேருவிடம் தான் போய் நிற்பார்களாம். அப்பேற்பட்ட குடும்பத்தை குறை சொல்ல, நரேந்திரமோடிக்கு எந்தத்தகுதியும் இல்லை. காங்கிரஸ், இந்த நாட்டுக்கு செய்தது என்ன என்பதையும், மோடி, இந்த நாட்டுக்கு என்ன செய்தார் என்பதையும் நம் இளைஞர்கள் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். அப்போது தான் காங்கிரஸ் இந்த நாட்டுக்காக செய்த சாதனைகளும், தியாகங்களும் புரியும். இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார். நிகழ்ச்சியில் தாம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜய்ஆனந்த், பல்லாவரம் நகர காங்கிரஸ் தலைவர் தீனதயாளன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டானர். இதையடுத்து, பெரும்புதூரில் அமைந்துள்ள ராஜிவ்காந்தியின் நினைவிடத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அங்குள்ள ராஜிவ் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.

The post பெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் ரூபி மனோகரன் எம்எல்ஏ மரியாதை appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Memorial ,Ruby Manokaran ,MLA ,Nellai ,Indian ,Rajiv Gandhi ,Tambaram, Chennai ,Dinakaran ,
× RELATED ராஜீவ்காந்தி நினைவு தினம்