×

கற்றல் விளைவுகள்!

திருமூர்த்தி நகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தமிழ்ப் பாடத்துக்கான கற்றல் விளைவுகள் செயலி வெளியிடப்பட்டுள்ளது. இச்செயலியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 5ம் வகுப்பில் உள்ள அனைத்துக் கற்றல் விளைவுகளுக்கும் வகுப்பறை செயல்பாடுகள், மதிப்பீட்டு செயல்பாடுகள், பாடநூலில் கற்றல் விளைவுகளுக்கான இடங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும், ஆசிரியர்களின் கற்பித்தலை வலுப்படுத்துவதற்கும், மாணவர்கள் ஆர்வமுடன் கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்கவும் உறுதுணையாக அமையும் என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே இந்தச் செயலி உள்ளது.

ஆஹா பிரியாணி இலை!

மசாலா பொருட்களில் மிக முக்கியமானது பிரியாணி இலை. கறிக்குழம்பு, பிரியாணி, அவ்வப்போது வெஜிடபிள் கிரேவிகளில் இதனைப் பயன்படுத்துவதுண்டு. வாசனைக்கு மட்டுமின்றி இந்த பிரியாணி இலையில் சில மருத்துவப் பயன்களும் உள்ளன. இதன் பூர்வீகம் கிரேக்கம். கிரேக்க கடவுளாக கருதப்படும் அப்பாசோ பிரிஞ்சு இலையை பயன்படுத்தி போர்களில் வெற்றி பெற்றதாகவும் கதைகள் உள்ளன. சூரியனின் தன்மையை கிரகிக்க பிரிஞ்சு இலை உதவுகிறது என்றும் சொல்வர்.இதனை அதிகளவு பயன்படுத்தி வந்தால் ஆண்மை பலம் அதிகரிக்கும். இதனை தலையணைக்குக் கீழே வைத்து உறங்கிவந்தால் நல்ல உறக்கம் ஏற்படும். மேலும் தெளிவான மனநிலை கிடைக்கும்.
பிரிஞ்சு இலையை எரிப்பதால் ஏற்படும் புகை உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டும் வல்லமையும் கொண்டது. பிரிஞ்சு இலையை பொடியாக செய்து பன்னீருடன் சேர்த்து வீட்டில் தெளித்து வந்தால் பூச்சிகள் அண்டாது. பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். பிரியாணி இலையை பால் இல்லாத டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது.
– கவிதாபாலாஜி கணேஷ்

The post கற்றல் விளைவுகள்! appeared first on Dinakaran.

Tags : Thirumurthy Nagar Teacher Education and Training Institute ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்...