×

1.07 லட்சம் தொழிலாளர்களுக்கான நலத்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் பெருமிதம்

மதுரை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக நேற்று, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 362 பேருக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கி பேசியதாவது: அதிமுக அரசு பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில், தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்கள், பயனாளிகளை முழுமையாக சென்றடையவில்லை. உதவித்தொகையும் உயர்த்தப்படவில்லை.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிலுவையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக சென்றடைய உத்தரவிட்டதன் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post 1.07 லட்சம் தொழிலாளர்களுக்கான நலத்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Department of Labour Welfare and Skill Development ,Madurai Collector's Office ,Minister ,Pride ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி