×

இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் புதுப்பட்டினம் வழியாக செல்ல வேண்டும்

சென்னை: புதுச்சேரி போக்குவரத்து கழக பொது மேலாளர் ஏழுமலை உத்தரவு: இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி போக்குவரத்து கழகத்தின் மூலம், புதுச்சேரியிலிருந்து இசிஆர் சாலை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் புதுப்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால், புதுப்பட்டினத்தில் உள்ள அதிக குடியிருப்புவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பேருந்துகள் அனைத்தும் புதுப்பட்டினம் வழியாக சென்று வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், அனைத்து பேருந்துகளையும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் புதுப்பட்டினம் வழியாக இயக்க வேண்டும்.

The post இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் புதுப்பட்டினம் வழியாக செல்ல வேண்டும் appeared first on Dinakaran.

Tags : ECR ,Pudupatnam ,CHENNAI ,Puducherry Transport Corporation ,General Manager ,Yehumalai ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...