×

திருப்பூர் மழை சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், உயிரிழப்புகளை தவிர்க்க தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

The post திருப்பூர் மழை சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,OPS ,Chennai ,Tiruppur district ,OBS ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...