×

காஷ்மீரில் கோல்ப் விளையாடிய ஜி20 பிரதிநிதிகள்

ஸ்ரீநகர்: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றது. இதையொட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில், பல்வேறு துறைகளின்கீழ் ஜி20 பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக்குழு கூட்டம் ஜம்மு தலைநகர் ஸ்ரீநகரில் நடந்தது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மே 22ம் தேதி தொடங்கிய 3 நாள் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் ஜி20 பிரதிநிதிகள், ராயல் ஸ்பிரிங்ஸ் கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் புகழ் பெற்ற தால் ஏரிக்கரையில் உள்ள முகலாய தோட்டங்களின் அழகை கண்டு ரசித்தனர்.

The post காஷ்மீரில் கோல்ப் விளையாடிய ஜி20 பிரதிநிதிகள் appeared first on Dinakaran.

Tags : G20 ,Kashmir ,Srinagar ,India ,G20 Federation ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி...