×

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த டி.ராஜா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான சி.வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

இன்று முதல் நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார்.கடந்த 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் பிறந்த நீதிபதி வைத்தியநாதன் வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம்பிள்ளை பள்ளியில் படித்தார். பின்னர் பிஏ பட்டப்படிப்பை முடித்து சட்ட படிப்பை மெட்ராஸ் சட்ட கல்லூரியில் முடித்தார். 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய வைத்தியநாதன் 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2015 ஏப்ரல் 14ல் நிரந்தர நீதிபதியானார்.

இவரது தந்தை வி.சுப்பிரமணியன் ஷூபாலிஷ் விற்பனை செய்து பின்னர் தொழிற்சங்க தலைவராக இருந்தார். மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஒன்றிய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : S. Vaithyanathan ,Chief Justice of ,Madras High Court ,President ,Drarubathi Murmu ,CHENNAI ,Chief Justice ,Dravupati Murmu ,Dinakaran ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...