×

மீஞ்சூரில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி, மே 24:மீஞ்சூரில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வட சென்னை அனல் மின் நிலையம். இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 1வது நிலையின் 3வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 210 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மீஞ்சூரில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Tiruvallur District Meenjoor ,Attipat… ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு