×

(தி.மலை) டெய்லரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது மேலும் 4 பேருக்கு வலை செய்யாறு அருகே

செய்யாறு, மே 24: செய்யாறு அருகே டெய்லரை வெட்டிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன்(42). மாற்றுத்திறனாளியான இவர் டெய்லராக உள்ளார். அதேகிராமத்தை சேர்ந்த ஏழுமலை, மகன் விஜய் ஆகியோருடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் விஜய் வெட்டி கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளார். இதில் வரதன் மற்றும் சிலருக்கு தொடர்பிருப்பதாக ஏழுமலை குடும்பத்தாருடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரதன் தனது குடும்பத்துடன் செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்திற்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அருகே உள்ள சுடுகாட்டு பாதையில் வரதன் நடந்து சென்றபோது ஒரேபைக்கில் வந்த நல்லூரை சேர்ந்த ஏழுமலை, அவரது மகன்கள் அஜித், நாகமணி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் வரதனை ஓட ஓட சரமாரியாக விரட்டி வெட்டி விட்டு தப்பிச்சென்றது. படுகாயமடைந்த வரதனை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வரதன் மனைவி வசந்தா தூசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அஜித்(22) என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். தொடர்ந்து நேற்று செய்யாறு குற்றவியல் கோர்ட்டில் ஆஜப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான ஏழுமலை உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post (தி.மலை) டெய்லரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது மேலும் 4 பேருக்கு வலை செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Taylor ,Web Seyyar ,Seyyar ,Thiruvannamalai District ,Vandavasi ,Vaba Seyyar ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்