×

பூக்கள் விலை உயர்ந்தது

காரிமங்கலம், மே 24: காரிமங்கலம், கோவிலூர், பெரியாம்பட்டி, கெரகோடஅள்ளி, பேகாரஅள்ளி, அடிலம், திண்டல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் பூக்கள் வரத்து அதிகரித்த போதிலும் விலை குறைந்தது. கடந்த சில நாட்களாக பூக்கள் வரத்து குறைந்துவிட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ₹350, சன்னமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி ஆகியவை ₹300க்கும், அரளி ₹80, சம்பங்கி, பன்னீர் ரோஸ் ₹60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள், கோயில் பண்டிகை வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பூக்கள் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Govilur ,Periyambatti ,Kerakodaalli ,Begaraalli ,Adelam ,Pindal ,
× RELATED கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்