×

வயிற்று வலியால் சிறுமி தற்கொலை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி அடுத்த நயப்பாக்கம் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளிகள். மணிகண்டன், கவிதா இவர்களது மகள் பவித்ரா(13), இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6ம் வகுப்பு செல்ல கோடை விடுமுறையில் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் மனைவி இருவரும் மகள் பவித்ராவிடம் அடுப்பு எரிய வைத்து சுடு தண்ணீரை காயவைக்கும்படி கூறியதாக தெரிகிறது. பின்னர் பூண்டியில் காய்கறி வாங்குவதற்காக கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் யாரும் இல்லை அப்போது பவித்ராவிற்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பவித்ரா, வலி தாங்க முடியாமல் துப்பட்டாவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த பென்னலூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

The post வயிற்று வலியால் சிறுமி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Poothukkotta ,Garundi ,Poothukkota ,Manikandan ,Kavita ,
× RELATED செங்கரை காட்டுச்செல்லி அம்மன்...