×

வாலிபருக்கு குண்டாஸ்

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது, மகன் கௌதமன் (எ) மணிகண்டன் (20). இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் பதிவாகி காயார் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பதிவேடு உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் மணிகண்டன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு எஸ்பி., மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து மணிகண்டன் (எ) கௌதமனை குண்டர் சட்டத்தின் கீழ், ஒரு ஆண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post வாலிபருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Tirupporur ,Panangatupakkam village ,Gauthaman (A) Manikandan ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ