×

தொடரும் அத்துமீறல்!: கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!!

புதுக்கோட்டை: தமிழ்நாடு மீனவர்கள் விசைப்படகை நடுக்கடலில் மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் 2 பேரை சிறைபிடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து நேற்று 118 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். 19 நாட்டிகள் தொலைவில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் ராஜ் கிரண், சுகுந்தன், சேவியர் உள்ளிட்ட 3 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை தமிழ்நாடு மீனவர்கள் படகு மீது மோதினர். இதில் சுரேஷ்குமார் படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த மூவரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதில் சுகுந்தன், சேவியர் ஆகியோரை மீட்ட இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலில் விழுந்த மற்றொரு மீனவரான ராஜ் கிரண் பற்றி தகவல் தெரியவில்லை. தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நாகை மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அத்துமீறலை இலங்கை கடற்படை அரங்கேற்றி இருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. …

The post தொடரும் அத்துமீறல்!: கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Pudukottai ,Tamil Nadu ,
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்