×

கோயில் ஊழியர்களின் பால்குட ஊர்வலம்

 

மதுரை, மே 22: மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் ஊழியர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. இந்த விழா சிறப்பாக நடைபெற ஆண்டுதோறும் கோயில் ஊழியர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் திருவிழா சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு, கோயில் ஊழியர்கள் நேற்று காலையில் யானைக்கல் வைகை ஆற்றில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கிணற்றின் அருகில் இருந்து பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனர். பின்னர் அங்கு சிறப்பு வழிபாடுளை நடத்தினர்.

The post கோயில் ஊழியர்களின் பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Balkuda ,Madurai ,Meenakshiyamman Temple ,Theppakulam Mariamman Temple ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்