×

கேரளாவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் ஓடுகிறது. நேற்று முன்தினம் மதியம் இந்த ரயில் வழக்கம் போல காசர்கோட்டிலிருந்து புறப்பட்டது. இரவு 7.30 மணியளவில் எர்ணாகுளத்தை தாண்டி சோட்டானிக்கரை அருகே ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ரயில் மீது கல் வீசப்பட்டது. இதில் சி 6 பெட்டி கண்ணாடியில் லேசான கீறல் விழுந்தது. இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சோட்டானிக்கரை போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் திரூர் என்ற இடத்திலும், பாப்பினிசேரி என்ற இடத்திலும் இந்த ரயில் மீது கல் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கேரளாவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Stone ,Bharat ,Kerala ,Thiruvananthapuram ,Vande Bharat Express ,Kasaragod ,Stone pelting on ,Dinakaran ,
× RELATED மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே...