ராய்ப்பூர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் நாயக்கின் நெருங்கிய உதவியாளர் மீது பெண் அரசு அதிகாரி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்ட அரசுத் துறையில் துணைப் பொறியியலாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் நாயக்கின் நெருங்கிய உதவியாளர் அருண் ஷர்மாவுக்கு பாலியல் துன்புறுத்தல் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் நாயக்கின் நெருங்கிய உதவியாளர் அருண் ஷர்மா, கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார்.
தற்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். என்னைப் பற்றி ஆபாச கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியட்டுள்ளார். ஆனால் இவ்விவகாரம் குறித்து முதலில் மறுத்த மாநில காவல் துறை, தற்போது அருண் ஷர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. அதேநேரம் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, சட்டீஸ்கர் மாநில போலீஸ் டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பாதிக்கப்பட்ட பெண் பணியாளர் தொடர்பான புகாரில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.
The post சட்டீஸ்கர் பெண் அரசு அதிகாரி வீடியோ வெளியீடு; காங்கிரஸ் எம்எல்ஏவின் உதவியாளர் மீது பாலியல் புகார்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.