×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடைவிடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 81,833 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,860 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.31 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan temple ,Tirumala ,Swami ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...