×

10ம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவி சாதனை

 

காரைக்குடி, மே 20: காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ஜெய்சன்மதா 500 க்கு 495 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறியில் 100, சமூக அறிவியல் 99 மார்க் பெற்றுள்ளார். வினிதா 500 க்கு 488, நிகில் 487 மார்க் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி குழும தலைவர் சேதுராமன், பள்ளி துணைத்தலைவர் அஜய்யுக்தேஷ், நிர்வாக இயக்குநர்கள் ரஜனிரத்னமாலா, ஜஸ்வர்யாயுக்தேஷ், தலைமையாசிரியர் அடைக்கலசாமி ஆகியோர் பாராட்டினார். மாணவி, ஜெய்சன்மதா கூறுகையில், ‘‘பள்ளியில் எந்த சந்தேகம் இருந்தாலும் உடனடியாக தெளிவுபடுத்தினர். எந்த பாடத்துக்கும் டியூசன் போக வில்லை. பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலேயே சிறந்த மதிப்பெண் பெற முடிந்தது. டாக்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியம்’’என்றார்.

The post 10ம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் பெற்று காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Karaikudi Maharishi ,Vidyamandir ,Karaikudi ,Karaikudi Maharishi Vidyamandir School ,Jaysanmatha ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்