×

பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் பிஇ மாணவி தற்கொலை

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் பிஇ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு காளிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா (19). பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி 3ம் ஆண்டு பிஇ படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் தங்கியுள்ள சக மாணவிகளிடம், தலைவலிப்பதாகவும், படிக்க வரவில்லை எனவும் ஜெயா கூறியுள்ளார். 3வது மாடி அறையில் தனியாக இருந்த ஜெயா, தனது துப்பட்டாவால் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறிது நேரம் கழித்து சக மாணவிகள் அறைக்கு வந்தபோது, ஜெயா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மாணவி ஜெயாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவி ஜெயாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூந்தமல்லி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் பிஇ மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : PE ,Poonthamalli ,Thiruvallur District ,Dinakaran ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை