×

கோவையில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது காணாமல்போன சிறுமி 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்பு

கோவை: கோவையில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போன சிறுமி 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருக்கும் போது திடிரென காணாமல்போனர், இது குறித்து சிறுமின் பெற்றோர்கள் அளித்த புகாரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தீவிரமாக தேடினர்.

சிறுமியின் விவரம் குறித்து சமூக வலைதளங்களில் பெற்றோர்கள் பதிவிட்டதால் அனைத்து பகுதிகளிலும் சிறுமி குறித்த தகவல் தீயாய் பரவியது. இதனிடையே சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த சிறுமி பேருந்தில் ஏறிச்சென்றது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்தின் வழித்தடத்தை கண்காணித்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், 24 மணி நேரத்திற்குள் சிறுமியை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மீட்டனர்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரியாணியில் செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் திட்டியதால் வீட்டில் இருந்து ரூ. 500 எடுத்துக்கொண்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டருந்ததாக கூறியுள்ளார். ஆனால் கேரளாவில் மழை பெய்து கொண்டு இருப்பதை அறிந்த சிறுமி மீண்டும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பெற்றோர்களுக்கு செல்போனில் அழைத்துள்ளார். இதை அடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி பேருந்து நிலையம் விரைந்து சென்று சிறுமியை பெற்றோர்களிடம் பத்திரமாக மீட்டுக்கொடுத்தனர்.

The post கோவையில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது காணாமல்போன சிறுமி 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Khova ,
× RELATED எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை,...