×

ஆதரவற்றோர் மீட்பு

திண்டுக்கல், மே 19: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் எஸ்.ஐ பொன்னுச்சாமி, எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு ஆண்கள் அழுக்கடைந்த ஆடைகளுடன் சுற்றி வந்தனர். விசாரணையில் அவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த சங்கர் (49), விழுப்புரம் சின்னகுப்பத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (36) என தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அவர்களை திண்டுக்கல் பாரதிபுரத்தில் செயல்படும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post ஆதரவற்றோர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,station ,Railway Police ,Inspector ,Thuyamani Vellachamy ,S.I. Ponnuchami ,SP ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளின் வசதிக்காக;...