×

வக்ப் வாரிய ஒப்பந்த பணிக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய வக்பு கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் “QAUMI WAQF BOARD TARAQQIATTI SCHEME” திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் அசிஸ்டென்ட் புரோகிராமர் 3 காலிபணியிடங்கள் 6 மாதங்களுக்கு மட்டும் மாத ஊதியம் ரூ.15,000, அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினியில் அறிவியல் அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம். மண்டல வகாப் அதிகாரி-1 காலி பணியிடம். 12 மாதங்களுக்கு மாத ஊதியம் ரூ.27,000. மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் அல்லது இதற்கு சமமான நிர்வாக அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சர்வே அசிஸ்டென்ட்-2 காலி பணியிடங்கள். 12 மாதங்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000. சர்வே அலுவலர்கள், களப்பணியில் அனுபவம் பெற்ற கணக்கெடுப்பு / வருவாய் அல்லது இதற்கு ஏற்ற துறையிலிருந்து ஓய்வு பெற்ற அனுபவமுள்ளவர்களிடமிருந்து வருகிற 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் tnwakfboard.tech@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வக்ப் வாரிய ஒப்பந்த பணிக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : WB Board ,Chennai ,Tamil Nadu Category Board ,Ministry of Minority Affairs ,Union Government of Tamil Nadu ,Wakp Board ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...