×

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு நிறுத்தம்: ஒரு மாதத்திற்கு கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவை நிறுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம் ஆகிய இரண்டு வட்டங்களில் நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கடந்த இரு தினங்களாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவை நிறுத்தியுள்ளனர். இதனால் இந்த இரண்டு வட்டங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் அளவிலான நெல் பயிர்கள் அறுவடை செய்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள 11 நெல் நேரடி கொள்முதல் நிலையங்களை ஒரு மாதத்திற்கு காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

The post நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு நிறுத்தம்: ஒரு மாதத்திற்கு கால நீட்டிப்பு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvandamalai ,Thiruvandamalai district ,Thiruvandamalai District Polur ,Dinakaran ,
× RELATED சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது...