×

தேனி அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து: 3 பேர் மீது வழக்கு

 

தேனி, மே 18: தேனி மாவட்டம், கோட்டூர் அய்யன்கோயில் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் அறிவழகன்(41) ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 12ம் தேதி வீரபாண்டி கவுமாரியம்மன்கோயில் திருவிழாவிற்கு ஆட்ேடாவில் சவாரி சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீரபாண்டி பைபாஸ் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ நின்றது. அப்போது ஆட்டோவிற்கு பின்புறமாக ஒரு டூவீலரில் வந்த 3 பேர் ஆட்டோவை நகர்த்துமாறு ஹாரன் அடித்தனர். இதனை தட்டிக்கேட்ட அறிவழகனை டூவீலரில் வந்தவர்கள் சரமாரி தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அறிவழகன் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியவர்கள் வீரபாண்டியை சேர்ந்த அஜீத் (24) மற்றும் இவரது நண்பர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அறிவழகனை கத்தியால் குத்திய அஜீத் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தேனி அருகே ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து: 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Vellachami ,Kottur Ayyankoil ,Theni district ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்