×

திருவாடானை – ஏம்பல் இடையே அரசு டவுன் பஸ் போக்குவரத்து எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

திருவாடானை, மே 18: திருவாடானையில் இருந்து ஏம்பலுக்கு புதிய வழித்தடத்தில் நகர பேருந்தை எம்எல்ஏ கரு.மாணிக்கம் துவக்கி வைத்தார். திருவாடானை பேருந்து நிலையத்தில் இருந்து அஞ்சு கோட்டை, மங்களக்குடி, கண்ணங்குடி மார்க்கமாக ஏம்பல் வரை புதிய வழித்தடத்தில் நகர பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று, இந்த வழித்தடத்தில் நகர பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதையடுத்து புதிய வழித்தடத்தில் நகர பேருந்து துவக்க விழா திருவாடானையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ கரு.மாணிக்கம் கலந்து கொண்டு புதிய வழித்தட பேருந்தின் பயணத்தை துவக்கி வைத்தார்.இந்த பேருந்து காலை 6 மணிக்கு ஏம்பலில் இருந்து திருவாடானைக்கும்,
மறு மார்க்கமாக மாலை 6 மணிக்கு திருவாடானையில் இருந்து ஏம்பலுக்கும் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினர். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார்,
திமுக ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் பாலா, காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post திருவாடானை – ஏம்பல் இடையே அரசு டவுன் பஸ் போக்குவரத்து எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Government ,Thiruvadanai ,Ampel ,Tiruvadanai ,MLA Nagaru ,Tiruvadana ,Empal ,Gemm Launcher ,
× RELATED அரசு மருத்துவமனையில் ஆபத்தான கழிவுநீர் தொட்டி