×

வியாபாரியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு

 

கோவை, மே 18: கோவை தண்ணீர்பந்தல் அய்யப்ப நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (39). இவர் கொடிசியா ரோட்டில் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி சுப்பிரமணியை மிரட்டி ரூ.200 பறித்துவிட்டு தப்பி செல்ல முயன்றார். அதிர்ச்சியில் சுப்பிரமணி சத்தம்போட்டார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வியாபாரியை மிரட்டி கத்திமுனையில் பணம் பறித்தது பீளமேடு சேரன்மாநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post வியாபாரியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Subramani ,Ayyappa Nagar ,Water Panthal, Coimbatore ,Kodisia Road ,Dinakaran ,
× RELATED கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது...