×

4 நகராட்சிகளில் ரூ.12 கோடியில் திட்டப்பணிகள்

 

ஈரோடு, மே 18:கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் ரூ.12 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றது. இந்நகராட்சிகளில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மட்டும் ரூ.12.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கிராமப்புற உள்ளாட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நமக்கு நாமே திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 4 நகராட்சிகளிலும் பொதுமக்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு வடிகால், சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

The post 4 நகராட்சிகளில் ரூ.12 கோடியில் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது