×

மூதாட்டியை கொன்று 65 சவரன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை

தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (65). ஒரு மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கணவர் இறந்து விட்டதால் ராஜேஸ்வரி மட்டும் தனியாக வசித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரியை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். அதன்பின் அவரை யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து தொட்டியம் போலீசார் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் கட்டப்பட்டு உடல் அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து வந்த மகன் மணிகண்டன் வீட்டில் இருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்தார்.

The post மூதாட்டியை கொன்று 65 சவரன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tontium ,Trichy District Thotium ,Iyappan City Rajeswari ,Ancestor ,
× RELATED தொட்டியம் அருகே நிலத்தகராறு இரு...