×

பள்ளியின் கழிவறையில் ஆணுறைகள் சிக்கியது; உ.பி-யில் 18 மாணவிகள் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர், உடந்தையாக இருந்த ஹெச்எம் உட்பட 3 பேர் கைது

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேச பள்ளி ஒன்றில் 18 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், கணினி ஆசிரியர் முகமது அலி என்பவர் 18 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கணினி ஆசிரியர் முகமது அலி, உதவி ஆசிரியர் சாஜியா, பள்ளி தலைமையாசிரியர் அனில் பதக் ஆகியோரை ஷாஜகான்பூர் டில்தார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஷாஜஹான்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீதும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், ஐபிசி, போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டில்தார் காவல் நிலைய எல்லையில் செயல்படும் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம், அதே பள்ளியில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர் முகமது அலி என்பவர் அடிக்கடி பாலியல் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டும், பள்ளியின் தலைமையாசிரியர் அனில் பதக் மற்றும் மற்றொரு ஆசிரியை சாஜியா ஆகியோர் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக முகமது அலிக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

முகமது அலியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனால் ஆவேசமடைந்த பெற்றோர், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி வளாகத்தை சோதனை நடத்தினர். பள்ளியின் கழிவறையில் பயன்படுத்திய ஆணுறைகளை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ெதாடர் விசாரணையில் கணினி ஆசிரியர் முகமது அலி, 18 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரில், உதவி ஆசிரியரும், முதல்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கணினி ஆசிரியர் முகமது அலி மீது துறை ரீதியான விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post பள்ளியின் கழிவறையில் ஆணுறைகள் சிக்கியது; உ.பி-யில் 18 மாணவிகள் பாலியல் பலாத்காரம்: ஆசிரியர், உடந்தையாக இருந்த ஹெச்எம் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Condoms ,Shahjaganpur ,Uttar Pradesh ,U. ,HM ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...